உள்ளே இருப்பது
வருட முடிவில் ஒருவகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் தமது வகுப்பாசிரியருக்குப் பல பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து கையளித்தனர். பூக்கடைக்காரரின் மகள் அழகான மலர்ச் செண்டொன்றைக் கொண்டுவந்து கொடுத்தாள். பேக்கரிச் சொந்தக்காரரின் மகள் பெரிய கேக் பெடடியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தாள். வெளிநாட்டு மதுபானக் கடை முதலாளியின் மகன் பெரிய பெட்டியொன்றைக் கொண்டு வந்து ஆசிரியரின் கையில் ஒப்படைத்தான். அப்பெட்டியின் அடிப்பகுதியில் சிறிது திரவம் ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒழுகிய திரவத்தை விரலால் தொட்டுச் சுவைத்துப் பார்த்த ஆசிரியர் ”இதில் இருப்பது வைன் தானே?” என்று கேட்டார்
”இல்லை” என்றான் சிறுவன்.
மீண்டும் ஒருமுறை விரலை நனைத்து அதனைச் சுவைத்துப் பார்த்த ஆசிரியர் ”ஓஹோ! இதனுள் இருப்பது பியர் தானே?” என்று கேட்டார்.
”இல்லை” என்றான் சிறுவன்.
நான் தோற்றுவிட்டேன் இப்பெட்டிக்குள் இருப்பது என்னவென்று நீயே சொல்லிவிடேன்” என்றார் ஆசிரியர் கெஞ்சலாக.
”ஒரு நாய்க்குட்டி” என்றான் சிறுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக